Wednesday, January 23, 2008

முப்பெரும் விழாவும் முருகனும்

தென்பழனி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
இன்று தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா?

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


சிவனின் ஆனந்த நடத்தை நம்மால் நேரில் பார்க்க முடியாமா? அதனால்தான் நீலகண்ட சிவன் அவர்களின் பாடல் மூலமாக பார்க்கலாமா.நாம் எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு கர்நாடக சங்கீதத்தை எதிர்காலத்தில் எப்படி இளம்தலைமுறையினர் காப்பாற்றப் போகிறார்கள் என்று.அந்தக் கவலையே வேண்டம் இந்தச் சிறுவன் என்ன போடு போடுகிறான் பாருங்கள். பக்க (பக்கா) வத்தியம் வாசிப்பவர்களும் சிறுவர்களே.

ராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்
பல்லவி
ஆனந்த நடமாடுவார் தில்லை
அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)
அனுபல்லவி
தானந்தமில்லாதா ரூபன்
தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)
சரணம்
பாதி மதி ஜோதி பளீர் பளீரென
பாதச்சிலம்புகள் கலீர் கலீரென
ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன
ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என
அண்டமும் பிண்டமும் ஆடிட
எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த
...)




தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

தந்தைக்கு ஞானகுருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த ஞானபண்டித தென்பழனிவளர் முருகன் தேர் பவனி வ்ரும் நாளும் தைப் பூசத்தன்றுதான்.நகரத்தார்களின் செல்லப்பிள்ளையான முருகனைப் பார்பதற்காக நடைப்பயணமாக் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செட்டி நாட்டிலிருந்து கால் நடையாக காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடலுடன் வருவது கண்கொள்ளாக் காட்சி. பணி நிமித்தமாக 1972 களில் கரைக்குடியில் இருந்தபோது கண்டு அனுபவித்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.சிறுவர் சிறிமிகள் கூட
மகிழ்ச்சியுடன் கல்ந்து கொள்வார்கள்.காலில் செருப்புகூட இல்லாமல் பழனி வரை செல்வது எளிதான காரியமில்லை. நம்பிக்கைதான் வழ்வு. அது வந்துவிட்டால் பலம், சக்தி தானே வந்துவிடும்.
இனி மும்பை ஜெயஸ்ரீ பாடிய முருகனின் மறுபெயர் அழகு என்ற பெஹாஹ ராகப் பாடலை பார்க்கவும் கேட்கவும்
ராகம்:- பெஹாஹ் தாளம்:- ஆதி
பல்லவி
முருகனின் மறு பெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு
அனுபல்லவி
குளுமைக்கு அவன் ஒரு நிலவு
குமரா என சொல்லி பழகு
சரணம்
வேதங்கள் போற்றிடும் ஒலியே
உயர் வேலோடு விளையாடும் எழிலே
துறவியும் விரும்பிடும் துறவே
துறவியாய் நின்றிடும் துறவே
-

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வள்ளலாரின் ஜோதி தரிசனமான நாளும் இன்றுதான்.. வள்ளலாரின் "ஒருமையுடன் நினது திருமலரடி" என்ற பிலஹரி ராகப் பாடல்
கொஞ்சும் சலங்கை படத்தில் திருமதி. ஸ் ஜானகி குரலில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் வெற்றி நடை போட்டு சாகாவரம் பெற்றது.இதோ அந்தப் பாடல்

-
இந்தப் பதிவை முதலில் கௌசிகம் பதிவில் இட்டு விட்டேன்.
பின்னர் நணபர் கே ஆர் ஸ் விருபத்தின்படி முருகன் அருளிலும் இடுகிறேன் முருகன் அன்பர்களுக்காக. இரண்டு பாடல்கள் முருகனைப் பற்றியது.

8 comments:

மெளலி (மதுரையம்பதி) January 23, 2008 12:47 AM  

நல்ல பாடல்களை தந்தமைக்கு நன்றி. குருவுக்கும் பூசத்திற்கும் உள்ள தொடர்பு எனக்குப் புதிய செய்தி. நன்றிகள் பல.

குமரன் (Kumaran) January 23, 2008 5:05 PM  

ஆகா. நேற்றே கௌசிகத்தில் இவற்றைக் கேட்டு விட்டேனே. இன்று மீண்டும் ஒரு முறை கேட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) January 24, 2008 10:15 AM  

குமரன் பார்க்க பார்க்க திகட்டுமோ முருகனின் தரிசனமும் பாடலும். நன்றி

தி. ரா. ச.(T.R.C.) January 24, 2008 10:18 AM  

மௌளி சார் குருவுக்கும் பூசத்துக்கும் தொடர்பு உண்டு . அதே மாதிரி குருவுக்கும் அனுஷத்துக்கும் தொடர்பு உண்டு அதையும் கூடிய விரைவில் பார்க்கப் போகிறீர்கள்

Radha Sriram January 28, 2008 9:22 PM  

பாட்டுக்களை கேட்டேன்....சின்னப் பைய்யன் எவ்வளவு நல்லா பாடரான்!!

மதுரை சோமு பாடிய ஒரு பாடல்'"நினைக்காத நேரமில்லை ஓடி வா முருகா" என்று ஆரம்பிக்கும் அதோட லிரிக்ஸும் பாடலும் போட முடியுமா?

நன்றி

இலவசக்கொத்தனார் January 28, 2008 10:20 PM  

பெஹாக்தான் பெஸ்ட்!!

தி. ரா. ச.(T.R.C.) February 09, 2008 4:05 AM  

வாங்க ராதா ஸ்ரீராம். ' நினைக்காத நேரமில்லை பாட்டு போடுகிறேன்.ஆனால் மதுரை சோமு பாடல் கிடைக்குமா தெரியவில்லை.

உண்மைத்தமிழன் February 09, 2008 5:17 AM  

தைப்பூசத்திற்கு இப்படியும் ஒரு கதை உண்டா..?

முருகா.. உன்னை நினைக்க, நினைக்க எனக்கு மட்டும் நீ புதுமையாகவே ஆகிக் கொண்டிருக்கிறாய்..

முருகா.. முருகா.. முருகா..

மிக்க நன்றி தி.ரா.ச.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP