Wednesday, January 07, 2009

மாதயை எனும் நிதி நீ தயை புரிந்தருள் மாதவன் மருகனே

செந்தில் வாழ் நகர் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா
இன்று கிருத்திகைத் திருநாள். முருகனை வணங்க வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் _ச்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும்.
ராகம்;- வஸந்தா தாளம்:- ஆதி2 களை
பல்லவி
மாதயை நிதிஎனும் நீதயை புரிந்தருள் மாதவன் மருகனே
முருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயை நிதியெனும்)

அனுபல்லவி

போதயன் பணிமலர்ப்பாதனே மறைமுகன்
புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை
புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயை நிதியெனும்)

சரணம்

கந்தனே கலியுகந்தனில் இரு கண்
கண்ட தெய்வமென எண்டிசை புகழும்
செந்திலாதிப சிறந்த வேலணியும்
சேவலா அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்)
பாடல் கிடைக்கவில்லை யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்

4 comments:

rahini January 18, 2009 2:52 PM  

ahahaa arumai

RSR March 02, 2019 10:34 PM  

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/29-maadhayai-nidhiyenum

D.Srinivasan November 30, 2020 9:28 AM  

I have recorded this song by Sweta Balasubramanian yesterday. How to post?

வரகூரான் நாராயணன் June 06, 2023 8:56 AM  

https://www.youtube.com/watch?v=Vx7qcAwAnnM

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP