Monday, April 12, 2010

பி.சுசீலாவின் முதல் முருகன் பாட்டு! - வைகறைப் பொழுதில் விழித்தேன்!

வணக்கம் மக்களே! இன்னிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! வெளிய வெயில் காய்ஞ்சாலும் உள்ள படபட-ன்னு குளிருது! :)
அதனால், இந்தச் செவ்வாய்க்கு....ரொம்ப எழுதாமல்...

ஒரு அபூர்வமான பாட்டு முருகனருளில்! கிட்டத்தட்ட சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டு-ன்னே சொல்லீறலாம்-ன்னு நினைக்கிறேன்! நீங்களே கேட்டுப் பாருங்க! சுசீலாம்மாவின் ஆரம்ப காலக் குரல்!

பாட்டில் நாதசுரமும் இருக்கு! இருந்தாலும் சுசீலாவின் குரல் நாதசுரத்துக்குப் பொருந்தி வருது - ஜானகியை விட! :) இது பற்றிய கேள்வி ஜானகி-சுசீலா பதிவில் இருக்கு! :)




வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்
நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் - அவன்
நினைவில் காலத்தைக் கழித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் - அதை
தினமும் மனத்தால் சுவைத்தேன் - என்
தேவைகள் யாவையும் உரைத்தேன் - அவன்
திருவருள் தந்தான் களித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் - பக்தி
உணர்வில் ராகத்தை வளர்த்தேன்
ஓம் எனும் மந்தரம் படித்தேன் - அவன்
கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!
(வைகறைப் பொழுதில்)

சூடிடும் குறிஞ்சி மலராவான் - அவன்
ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் - மெய்
அருள் வரும் ஞானக் களியாவான் - என்றும்
அவனே வாழ்வுக்கே உயிராவான்!
(வைகறைப் பொழுதில்)

ஓம் சரவண பவாய நம ஓம்!

வரிகள்: ?
இசை: ?
குரல்: பி.சுசீலா


ஓம் சரவண பவாய நம ஓம் என்று அழகாக இழுத்து முடிக்கிறார்!

சின்ன வயசில், ஊரில் மார்கழி மாசம் போது, இந்தப் பாட்டைத் தான் வைகறைப் பொழுதில் மொதல்ல போடுவாங்க! திருப்பாவை ஒலிக்க விடுவதற்கு முன்பு, இந்தப் பாட்டு தான் ஒலிக்கும்! ஏன்-ன்னா சவுண்ட் சர்வீஸ் அண்ணா (பாஸ்கர்-ன்னு நினைக்கிறேன்) ஒரு தீவிர முருக பக்தர்! :)

நானும் "வைகறைப் பொழுதில் விழித்தேன்"-ன்னு கேட்டுக்கிட்டே தான் விழிச்சி இருக்கேன்! அப்பறம் தான் திருப்பாவை! யாரோ ராகமாப் பாடுவாங்க ஸ்பீக்கர்-ல! ஒரே லைனை பத்து வாட்டி இழுப்பாங்க! அது அவ்ளோ நல்லா இருக்காது சுசீலாம்மா பாடுவதைப் போல்! :)
இருந்தாலும் திருப்பாவை ஆச்சே! எப்படி வுட்டுக் கொடுக்கறது? மனசு வராதே! விதியே-ன்னு முப்பது பாட்டும் ஸ்பீக்கர்-ல்ல கேட்டுக்கிட்டே, கோயிலடி-கிணத்தடி-மஞ்சக் காப்பு அரைக்கிறது போல வேலையெல்லாம் முடிச்சி இருப்பேன்!

ஐயமாரு, அவிங்க வீட்ல தனி வாளியில் பொங்கியாந்த பொங்கலை, எனக்குத் தனியாக் கூப்புட்டுக் கொடுப்பாரு! பெருமாள் சாப்பிடாம அவரு சாப்பிட மாட்டாரு! ஆனா என்னைய மட்டும் சாப்பிடச் சொல்வாரு! சின்ன புள்ள ஒத்தை ஆளா மஞ்ச அரைச்சிருக்கேன்-ல்ல? :)
நானும் பெருமாள் சாப்புட்டாரா-ன்னா சென்ட்டி எல்லாம் அப்போ பார்த்ததில்லை! நல்ல புள்ளையா, பசியிலும் குளிரிலும் சுடச்சுட எறங்கும்! :)

Btw, திருப்பாவை முப்பதும் சுசீலாம்மாவும் தன் ஸ்டைலில் பாடி இருக்காங்க! யாராச்சும் சுட்டியோ, தகவலோ கொடுங்களேன்! புண்ணியமாப் போவும்!

சரி...என் முருகன் பாட்டுக்கு வருவோம்! நான் பேச்செடுத்தாலே பொறந்த வீட்டு பெருமாள் பேச்சு வந்துருது-ல்ல? :)
இந்தப் பாட்டில் தேன் தேன்-ன்னு வருது, கவனிச்சீயளா?
இப்படி சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டே தேனாகி...
பின்பு காலமெல்லாம் தித்திக்கும் பாடல்களைத் தந்தது!

நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேதேதேதேன் - என்பதில் தான் எத்தனை "தேன்"!!! செல்வமே முருகாஆஆஆ!

9 comments:

SurveySan April 12, 2010 10:44 PM  

unrelated, but related

http://surveysan.blogspot.com/2010/04/spb.html

Kannabiran, Ravi Shankar (KRS) April 12, 2010 11:08 PM  

surveysan annachi...
unrelated illa! related thaan! :)
maRupadiyum lesaa aarambichiteengaLaa? - Susheela vs Janaki-yai? :))

Unknown April 14, 2010 4:57 AM  

வாவ் என்ன அருமையான பாடல் ..... . தமிழ் புத்தாண்டில் என் அப்பன் முருகனுக்கு

தேன்னுடன் தினைமாவு கலந்து என் உள்ள மகிழ்வோடு பாடி பரவசமாய் பாடிட தோனுதய்யா முருகைய்யா ...சித்ரா

www.bogy.in April 14, 2010 5:29 AM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

குமரன் (Kumaran) April 14, 2010 9:58 AM  

வைகறைப் பொழுதினில் விழித்தேன் அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) April 19, 2010 12:38 PM  

//Ramachandran said...
வாவ் என்ன அருமையான பாடல் ..... . தமிழ் புத்தாண்டில் என் அப்பன் முருகனுக்கு//

ஆமாம் சித்ரம் ஐயா! This is kinda susheelamma's oldest murugan song!

Kannabiran, Ravi Shankar (KRS) April 19, 2010 12:39 PM  

yaaru-pa intha bogy.in?
cheri vaazthu nu cholRaaru! vaazthukkaL :)

Kannabiran, Ravi Shankar (KRS) April 19, 2010 12:42 PM  

//குமரன் (Kumaran) said...
வைகறைப் பொழுதினில் விழித்தேன் அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்!//

kumaran, correction...pozhuthinil illa, pozhuthil :)

//April 14, 2010 9:58 AM//

ithaan vaikaRai pozhuthaa, unga oor-la? :)

Unknown September 12, 2020 8:10 PM  

மிக அருமையான பாடல் சுசீலாவின் தேன் போன்ற குரலில்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP