Monday, July 19, 2010

முருகன் - பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??

இன்னிக்கு TMS குரலில், ஒரு வித்தியாசமான பாட்டை, கிட்டத்தட்ட கிறிஸ்துவ ட்யூன்-இல் இருக்கும் முருகன் பாட்டைக் கேட்போம்! :)
ஓப்பனிங் பீஸ், ஒரு பழைய தமிழ்ப் பாட்டு - சிவாஜி படப் பாட்டு போலவே இல்ல? என்ன சினிமாப் பாட்டு-ன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்! :)

முருகனைப் பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்!
ஆனால் எனக்கு, அவனைப் பார்க்கப் பார்க்க, பசி தான் இன்னும் அதிகமாகும்... :)

பின்னே? படையலில் வச்சிருக்கும் தேன், தினைமாவு, அப்பம், அதிரசம் - இதெல்லாம் பார்த்தால்?
இதெல்லாம் கூட சமாளிச்சிறலாம்...
ஆனால் அவன் இதழ்க் கோட்டோரம் அந்தச் செழும்-செவ்-இதழ்கள்...அதைப் பார்த்தால்...பசி அல்லவோ அதிகமாகிறது? :) பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க!

பன்னிரு விழி அழகை, முருகா
பார்த்தால் பசி வருமா? - உன்

பனிமொழி வாய்த் தமிழை, முருகா

கேட்டால் துயர் வருமா?

(பன்னிரு விழி அழகை)

கண் இரண்டு இருந்தென்ன - உன்
கதிர்வேல் அழகைப் பாராமல்?

கால் இரண்டு இருந்தென்ன - உன்

குன்றத்தில் வந்து சேராமல்?

(பன்னிரு விழி அழகை)

பொன் பொருள் எதற்காக - உன்
புன்னகை இன்பம் இல்லாமல்?

என்னுயிர் எதற்காக - உன்

இணையடிப் போற்றிக் கொள்ளாமல்?
(பன்னிரு விழி அழகை)

ஓசைகள் எதற்காக - ஓம்
ஓம் என்று
ஒரு தரம் பாடாமல்?
ஆசைகள் எதற்காக - உன்
அருள் பெறும் வழியை நாடாமல்?

(பன்னிரு விழி அழகை)

முருகா ... முருகா ...
முருகா ... முருகா ...



உன் அருள் பெறும் வழியை நாடாமல், ஆசைகள் எதற்காக? என்கிறாரே! ஆசை வேணும்-ங்கிறாரா? வேணாம்-ங்கிறாரா?
ஆசையை ஒழி! ஆசையே துன்பத்துக்குக் காரணம்-ன்னுல்ல சொல்லுவாங்க?

அருள் பெறும் வழியை நாடாமால், கண்ட கண்ட ஆசை இருந்தால், அப்போது பயனில்லை!
ஆனால் அவன் அருளை நாடி, அதையே முதல் முதல் ஆசையாய், தலையாய ஆசையாய் வைத்து விட்டால், மத்த ஆசை எல்லாம் இருந்தாலும், அதெல்லாம் நம்மை ஒன்னும் செய்யாது விட்டு விடும்! :)

அவன் திருமேனி மீது அதிக ஆசை வையுங்கள்! மற்ற ஆசைகள் எல்லாம் அதற்கு அப்புறம் தான் என்று வைத்து விடுங்கள்! அப்படி வைத்து விட்டால்.....
முருக ஆசையே மேலோங்கி நிற்கும்!
இதர பருக ஆசையெல்லாம் அதன் பின்னால் தான் நிற்கும்!

நான் ஆசையை ஒழிக்க மாட்டேன்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

1 comments:

sury siva July 21, 2010 11:15 PM  

அற்புதம். ஆனந்தம்.
இனிப்பு அதிகம். இருப்பினும்
ஈர்ப்பு கம்மியோ ?



கண்களின் வார்த்தைகள் புரியாதா , காத்திருப்பேன் என்று தெரியாதா என்ற பாடலின் மெட்டு போல்
தோன்றுகிறது.

முடிந்தால், நானும் ஒரு மெட்டு அமைத்து பாடுவேன்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP