Sunday, March 06, 2011

சிந்தையிலே கந்தனை வை!


என்றனுயிர் உன்றனுக்கு
கன்னிமகன் கந்தனுக்கு
வண்ணமயில் வேலனுக்கு
வேதியனின் பாலனுக்கு!

காவடிகள் ஆடிவரும்;
கந்தனுன்னைத் தேடிவரும்;
சேவடிகள் கண்டுவிட்டால்,
சென்மம்கடைத் தேறிவிடும்!

பக்தரெல்லாம் பாடிவர,
சித்தரெல்லாம் நாடிவர,
கத்துங்குயில் புள்ளினமும்
கந்தன்புகழ் கூறிவர!

பால்குடங்கள் கூடவரும்;
பாலனுன்னைத் தேடிவரும்;
வேலன்முகம் கண்டுவிட்டால்
பாவமெல்லாம் ஓடிவிடும்!

கந்தன்முகம் கண்டிடவே
சிந்தையிலே கந்தனைவை
பந்தம்விட்டு வந்தவனை
சொந்தமிவன் என்றேவை!


--கவிநயா

17 comments:

R. Gopi March 07, 2011 9:02 AM  

\\கன்னிமகன் கந்தனுக்கு\\

முதல்மகன் என்ற பொருளிலா?

Kavinaya March 07, 2011 9:23 AM  

வாங்க கோபி.

கந்தன் முதல் மகன் இல்லையே?

"அகிலாண்டம் ஈன்ற அன்னை என்றும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்று தாயுமானவர் பாடுவார்; அப்படியே அம்மாவை நானும் கன்னி என்றேன்.

வாசிப்பிற்கு நன்றி :)

Unknown March 08, 2011 2:39 AM  

/கந்தன்முகம் கண்டிடவே
சிந்தையிலே கந்தனைவை
பந்தம்விட்டு வந்தவனை
சொந்தமிவன் என்றேவை!
/

அருமை!
பந்தம்விட்டு வந்தவர்க்கெல்லாம் சொந்தமாய் கந்தன் இருப்பான்!

Test March 08, 2011 8:56 AM  

அருமையான பாடல்

Prasad March 08, 2011 12:47 PM  

கலக்கலான கந்தன் கவிதை! வாழ்த்துக்கள்!
( என் முந்தைய பின்னோட்டத்தை நீக்கவும்; என் எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்)

Kavinaya March 08, 2011 9:34 PM  

மிக்க நன்றி அருணையடி, லோகன், மற்றும் ப்ரசாத் :)

இராஜராஜேஸ்வரி March 10, 2011 6:29 AM  

கந்தனைப் பாடிய
கன்னல் வரிகள்
கருத்துக்கள்
காவடிகள் ஆடிவர
நாடிவந்த சொந்த
கந்தனின் பாடல்
நிறைந்த அற்புதம்.

Kavinaya March 10, 2011 3:45 PM  

உங்களின் இனிய கவிதை பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி :)

Lalitha Mittal March 12, 2011 4:52 AM  

"sevadigal kanduvittaal
janmam kadaitherividum"

"velanmugam kanduvittaal
paavamellaam odividum"

what else do we need beyond this?
saravanabhavaa!saranam!

சிவகுமாரன் March 12, 2011 7:18 PM  

ஆகா அருமை. அருமை

தமிழ் March 13, 2011 6:55 AM  

கந்தனைக்
கன்னித்தமிழில் பாடிய தங்களின்
கற்கண்டு கவிதையைக்
கண்டு களிப்புற்றேன்

நன்றி அக்கா

குமரன் (Kumaran) March 13, 2011 2:41 PM  

கன்னிமகன் கந்தனா? கன்னிமகன் என்றவுடன் ஏசுநாதர் தான் என்றும் நினைவிற்கு வருவார்! இனிமேல் கந்தனும் வருவான். :-)

குமரன் (Kumaran) March 13, 2011 2:41 PM  

கத்தும் குயிலோசைன்னு பாரதியார் சொன்னதுக்கு ஒரு பொருள் உண்டு. நீங்க சொன்னதுக்கு என்ன பொருள் அக்கா?

Kavinaya March 13, 2011 9:50 PM  

//what else do we need beyond this?//

நன்றாகச் சொன்னீர்கள் லலிதாம்மா.

//saravanabhavaa!saranam!//

சின்னக் குழந்தையின் திருவடிகளை நானும் வணங்கிக் கொள்கிறேன்.

Kavinaya March 13, 2011 9:51 PM  

//ஆகா அருமை. அருமை//

உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. நன்றி சிவகுமாரன் :)

Kavinaya March 13, 2011 9:51 PM  

//கந்தனைக்
கன்னித்தமிழில் பாடிய தங்களின்
கற்கண்டு கவிதையைக்
கண்டு களிப்புற்றேன்//

மிக்க நன்றி திகழ்!

Kavinaya March 13, 2011 9:54 PM  

//கன்னிமகன் கந்தனா? கன்னிமகன் என்றவுடன் ஏசுநாதர் தான் என்றும் நினைவிற்கு வருவார்! இனிமேல் கந்தனும் வருவான். :-)//

நல்லது குமரா :) அந்த வார்த்தைகள் இயல்பாக வந்து விழுந்தவைதாம்.

//கத்தும் குயிலோசைன்னு பாரதியார் சொன்னதுக்கு ஒரு பொருள் உண்டு. நீங்க சொன்னதுக்கு என்ன பொருள் அக்கா?//

இவையும் அப்படியே. பாரதியாரோட சொற்றொடர் அப்படியே வந்திடுச்சோ என்னவோ. எழுதும் போது அப்படி யோசிச்சு எழுதலை.

'பந்தம் விட்டு வந்தவனை' மட்டுமே இருபொருள் நினைச்சு எழுதினேன்... 'பந்தம் விட்டு வந்து, அவனை' / 'பந்தம் விட்டு வந்தவனை', என்று...

வாசித்தமைக்கு நன்றி குமரா :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP