Friday, June 17, 2011

அழகு மயில் ஏறி...


அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் – நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் – அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!

பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் – அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!

அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் – அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் – அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!


--கவிநயா

என் மனசில் நினைச்சு எழுதிய ராகத்திலேயே சுப்பு தாத்தாவும் பாடித் தந்திருக்கார்! மிக்க நன்றி தாத்தா!



படத்துக்கு நன்றி: http://my.opera.com/Tamil/albums/showpic.dml?album=196902&picture=5521553

13 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) June 17, 2011 9:48 AM  

படம் அழகு! பாலனும் அழகு!

//விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன்//

விருத்தனைப் போல்நடித்து வள்ளி விருந்தும் ஆனவன்:))

Kavinaya June 17, 2011 11:31 AM  

//படம் அழகு! பாலனும் அழகு!//

பாடல்?

//விருத்தனைப் போல்நடித்து வள்ளி விருந்தும் ஆனவன்:))//

:)

கடம்பவன குயில் June 17, 2011 12:47 PM  

அருமையான முருகன் அருட்பா

Lalitha Mittal June 17, 2011 9:38 PM  

'pazhagu thamizh paadalile mayangi ninraan'
'kanmalargal thaam seruga kaninthu ninraan'
nice to think of kandhan's eyes[12]
in that position!
music??

திகழ் June 17, 2011 10:01 PM  

இரசித்தேன்
கந்தனையும்
கவிதையும்

சிவ.சி.மா. ஜானகிராமன் June 18, 2011 3:51 AM  

பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்யும் முருகப் பெருமான் திருவடி பற்றும் வாய்ப்பு அமைந்தமையில் மகிழ்கிறேன்..

அன்பன் சிவ. சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com

Kavinaya June 18, 2011 7:19 PM  

//அருமையான முருகன் அருட்பா//

மிக்க நன்றி கடம்பவன குயில். உங்க பேர் அழகா இருக்கு :)

Kavinaya June 18, 2011 7:20 PM  

//nice to think of kandhan's eyes[12]
in that position!//

ஆமா இல்லை? :)

//music??//

இப்பதான் இட்டேன். சுப்பு தாத்தாவோட குரலில். கேட்டு மகிழுங்கள் :)

மிக்க நன்றி லலிதாம்மா.

Kavinaya June 18, 2011 7:21 PM  

//இரசித்தேன்
கந்தனையும்
கவிதையும்//

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் திகழ்!

Kavinaya June 18, 2011 7:24 PM  

//பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்யும் முருகப் பெருமான் திருவடி பற்றும் வாய்ப்பு அமைந்தமையில் மகிழ்கிறேன்..//

வாருங்கள் சிவ. சி.மா.ஜா. வருகைக்கு மிக்க நன்றி.

திகழ் June 18, 2011 11:35 PM  

இசையோடு வாசிக்கும் பொழுது
இன்னும் அதிக இன்பம்

நன்றி தாத்தா

Kavinaya June 20, 2011 9:21 PM  

//இசையோடு வாசிக்கும் பொழுது
இன்னும் அதிக இன்பம்//

ஆம் திகழ். மீண்டும் வந்து பாடலைக் கேட்டமைக்கு நன்றிகள்.

Anonymous January 04, 2012 4:11 PM  

You have an amazing way of sharing ideas. And I definitely like it. kamagra

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP