Tuesday, October 04, 2011

அரஹரோஹரா!



அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)


--கவிநயா

4 comments:

இராஜராஜேஸ்வரி October 07, 2011 10:55 PM  

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா


அருமையாக முருகன் அருள் பெற்றோம். நன்றி.

Kavinaya October 08, 2011 10:41 PM  

வருகைக்கு மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி.

Lalitha Mittal October 11, 2011 6:54 AM  

கோவணாண்டியாய் வந்த அரஹரோ ஹரா;

ஆவினன்குடியழகா ! அரஹரோஹரா;

சேவடிகள் தொழுதிடவே அரஹரோ ஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோ ஹரா

Kavinaya October 11, 2011 3:30 PM  

அரஹரோஹரா!

நன்றி லலிதாம்மா.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP