Tuesday, July 30, 2013

கந்தன் காலடியை வணங்கினால்?

இந்தச் செவ்வாயும், தேவரின், "திருவருள்" படத்திலிருந்தே:) AVM ராஜன் வாயசைக்க, TMS கணீர்க் குரலில்!
தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள் = இங்கு வாசிக்கலாம்!:)

பாட்டுக்குப் போவோம்!
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!! 
- இந்த வரியில், வீடியோவில் நிறுத்திப் பாருங்க! சுவையான காட்சி!

- என் அப்பா திருமாலும், என்னவன் முருகனும்.. அழகோ அழகு!:)


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே..
(கந்தன் காலடியை..)



தந்தை பரமனுக்குச் - சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் - சக்தி தானே வேலன்
அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!!
(கந்தன் காலடியை..)

உமையவள் தன் வடிவம் - மதுரையில் மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் - காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் - காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு - அவனுக்கு இணை எவனுண்டு?
(கந்தன் காலடியை..)

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

கந்தனிடம் செல்லுங்கள் - என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும் - மற்றவற்றைத் தள்ளுங்கள்
(கந்தன் காலடியை..)

படம்: திருவருள்
குரல்: TMS
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்

Love u Muruga:)
Be nice with my Father:))

1 comments:

திண்டுக்கல் தனபாலன் July 30, 2013 1:55 AM  

அழகோ அழகு... வடிவேலனும் பாடலும்...

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP