Monday, November 18, 2013

அபூர்வமான முருகன் பாடல்: MSV - KBS கூட்டணி!

வணக்கம்! இந்தச் செவ்வாயில் அபூர்வமான பாடல்!
MSV - KBS என்ற கூட்டணி அபூர்வம்!

கே.பி. சுந்தராம்பாள் (எ) KBS அம்மா
இவரின் பல திரையிசைப் பாடல்கள் = இசையமைப்பாளர் கேவி மகாதேவன் அவர்களுக்கே சென்று அமைந்து விட்டன;

MSV -க்கு = KBS அம்மாவின் ஒரு பாடலும் அமையவில்லை..
அப்படியும் அமைஞ்ச இந்த ஒரே படம், வெளிவராமலேயே போனது:(

படம்: ஞாயிறும் திங்களும்
சிவாஜி, தேவிகா, முத்துராமன், கே.ஆர்.விஜயா எனப் பலரும்..
இயக்குநர்: ஸ்ரீதர்
இத்துணை புகழ் மிக்கோர் இருந்தும், படம் வெளிவரவில்லை..

இந்தப் பாடலை வலையேற்றி உதவியுள்ளார், MSV Quiz ஆர்வலர்!
அவர் காலடியைத் தொட்டுக் கொள்கிறேன்!

கேட்டுச் சொல்லுங்கள், KBS (எ) செந்தமிழ் நங்கையை! - கீழே பட்டையைச் சொடுக்குங்கள்



வீறு தமிழ்ப் பாலுண்டு, வெற்றிக்கு வேல்கொண்டு
ஆறுதலைத் தந்த முருகா!

ஏறுமயில் சேவலென சூரபதன் மேல்மீது
கூறுபட வென்ற முருகா!

ஆறுபடை வீடுமலை மீதுகொடி ஆடஎம்மை
அரசாள நின்ற முருகா!

அத்தனிடமே பெரிய தத்துவம் உரைத்(து)அரிய
வித்தென விளைந்த முருகா!
-------------

ஓங்காரம் குடிகொண்டு ஆங்காரம் தனைவென்று
ரீங்காரம் செய்யும் முருகா

ஒருகால் நினைப்பவர்க்கு பலகாலும் துணைநின்று
எதிர்காலம் நல்கும் முருகா
நல்ல எதிர்காலம் நல்கும் முருகா!
(ஓங்காரம் குடிகொண்டு)

ஓராறு முகத்தாலும் ஈராறு விழியாலும்
தேனாறு சிந்தும் முருகா - இவர்
யார்யார் என்று எண்ணாமல், எவர் வந்து கேட்டாலும்
சீர்நல்கும் தெய்வ முருகா!
(ஓங்காரம் குடிகொண்டு)

தாழ்வாரை மேலெடுத்து, வீழ்வார்க்குக் கைக்கொடுத்து
வாழ்வாக்கி வைக்கும் முருகா - நன்றி 
வாழ்வார்க்கும் பால்வார்த்து மனம்காக்க அறம்காத்த
வேல்பார்த்த வீர முருகா!

நாடிய ஏழையின் தாய்முருகா!
நல்லவர் வீட்டினில் சேய்முருகா!
பாடிடும் செந்தமிழ்ப் பாவலர் கைகளில்
நாடகம் ஆடிடும் வேல்முருகா!

மலைமுருகா! தலைமுருகா!
தமிழ் மழையே! தனி அழகே!
நாளும் மனிதர் வாழும் வழியைக் கூறும் வகையில்
(ஓங்காரம் குடிகொண்டு)

படம்: ஞாயிறும் திங்களும் (வெளிவரவில்லை)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் (MSV)
வரி: கண்ணதாசன்
குரல்: கே.பி.சுந்தராம்பாள்


இதே படத்தில், இன்னும் 2 பாடல்கள் உண்டு, அம்மா குரலில்!
* கேட்ட வரம் கொடுக்கும்
* வகுத்தால் வகுத்த

MS Viswanathan இசையில், KBS அம்மா குரல் வெளி வரலீன்னாலும்
TK Ramamurthi இசையில், வந்ததாச்சும் ஒரு பெரிய ஆறுதல்..
= சக்தி லீலை -ன்னு படத்தில் பாடி இருப்பாங்க..

கேவி மகாதேவனுக்கே பல KBS பாடல்கள் அமைஞ்சி விட்டாலும்..
வேறு சில இசையமைப்பாளர்களுக்கும் கொஞ்சமா அமைஞ்சது, ஒரு வரமே!

* ஆர்.சுதர்சனம் – பூம்புகார் (வாழ்க்கையெனும் ஓடம்)
* ஜி ராமநாதன் - ஒளவையார் (??? சரி பார்த்துச் சொல்லவும்)
* குன்னக்குடி - காரைக்கால் அம்மையார் | திருமலைத் தெய்வம்

முருகா முருகா -ன்னு முழங்கிய KBS அம்மாவின் கடைசிப் படம்
= “திருமலைத் தெய்வம்” -ன்னா முடிஞ்சி போனது?

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக் கவலை? -ன்னு பாடினாங்களே தவிர..
அம்மாவின் மனக் கவலையை அறிவார்கள் மாயோனும் சேயோனும்!

வெற்றிக்கு வேல் கொண்டு, வீறு தமிழ்ப்பால் உண்டு
ஆறுதலைத் தந்த முருகா!
KBS (எ) ஜீவனுக்கு = உன் நிழலில், என்றும் ஆறுதலைத் தா!

5 comments:

sury siva November 19, 2013 4:12 AM  

Where is the link for this Great Song of KBS?

Song is not traceable in youtube.

pl.send me the link.
subbu thatha.
meenasury@gmail.com

குமரன் (Kumaran) November 19, 2013 4:19 PM  

Sir

Here is the link

http://soundcloud.com/msv-quiz/msv-quiz-012/s-DiZj5

Unknown June 29, 2021 4:23 AM  

Super

Unknown June 29, 2021 9:13 AM  

KBS Kaviarasar MSV three legends I felt like that I am nearby The Lord Muruga.awesome.

Anonymous July 08, 2022 11:31 PM  

Really awesome

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP