Tuesday, December 03, 2013

The 1st song of "Child" MS Subbulakshmi

எம்.எஸ்.சுப்புலட்சுமி (எ) MS Amma
= இவர்கள் இசையைக் கேட்காதவர்கள் கூட இருப்பார்கள்..
= ஆனால் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்!

அந்த MS Amma, பாடிய "முதல் பாட்டு" எது? அதாச்சும் முதலில் ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு?
= முதல் வணக்கம் முருகனுக்கே!:)

என்ன வியப்பா இருக்கா?:)
மீராவாக நடித்தவர்.. கண்ணா என்று கதறுபவர்..

அனைத்து தெய்வ வடிவங்களையும் போற்றினாலும்...
எம்பெருமான் திருவேங்கடமுடையான் மீது "ஆழ்ந்த பற்றுதல்" கொண்டவர்;
இன்றும் திருப்பதியில் சிலையாக வாழ்பவர்!


அவரா முருகன் மீது முதல் பாட்டு?:)
ஒரு வேளை, என்னைப் போலவே அவங்களும் போல..
*பொறந்த வீடு = "அப்பா திருமால்" என்றாலும்,
*புகுந்த வீடு = "காதல் முருகனோ" என்னமோ?:)))

அது ஒரு சிறுகதை!
பார்க்கலாமா, இன்றைய செவ்வாய்க்கிழமை?


Madurai Shanmugavadivu Subbulakshmi = MSS

சண்முகவடிவு = அம்மா பேரு;
அப்பா பேரு = அதிகம் வெளியிற் தெரிவதில்லை..
கணிகையர் குடியில் உதித்தவர்!

சுப்புலட்சுமிக்குப் 10 வயது (1926)
அன்னிக்கி சாயந்திரம், பள்ளிக்கூடம் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கொறிச்சிட்டு..
வெளியில் போய் விளையாடும் ஆசையில், குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வந்தா....

தாய் சண்முகவடிவு = ஓர் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செஞ்சி வச்சிருக்காங்க!

அவிங்களே ஒரு நல்ல வீணைக் கலைஞர் தான்!
அந்தச் சுற்று வட்டாரச் சூழலும் நட்பும் தந்த அறிமுகத்தால், Oriental Records என்னும் ஒலித்தட்டு நிறுவனம் மூலமாக, இப்படியொரு வாய்ப்பு!

சரி, என்ன பாட்டு பாட?
அதையும் தாயே முடிவு பண்ணி வைச்சாச்சி!



அந்தப் பாட்டை எழுதியவர் = ஒரு பெரும் "வைணவர்"
ஆனால், திருச்செந்தூர் முருகனிடம் ஆராக் காதல் கொண்டவர்;
பேரு: பகழிக் கூத்தர் (15th CE)

"முருகா முத்தம் தருகவே, முருகா முத்தம் தருகவே"... ன்னு
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடிய திருமால் அன்பர்!

முருகன் பிள்ளைத் தமிழிலும்..
நூலின் காப்புச் செய்யுளைத் திருமாலுக்கே வைத்தவர்..
குமரப் பெருமான் தனைக் காக்கச்
சங்கு ஆழி படைத்த பெருமாளே!

அவர் வயிற்று நோயும் தீர்த்து.. வங்கார மார்பிலணி பதக்கமும் குடுத்த முருகன்!
அவருடைய கதை = இங்கே!
அப்பறமாப் படிச்சிப் பாருங்க! "பகழி" என்ற செந்தமிழ்ச் சொல்லுக்குப் பொருளும் புரியும்!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டைத் தான், சுப்புலட்சுமியின் அம்மா, தேர்ந்தெடுத்து வச்சி இருக்காங்க!
ஆனா இதைப் பத்து வயசுப் பொண்ணு பாட முடியுமா? செந்தமிழ்-ல்ல வேற இருக்கே?

நீங்களே கேளுங்கள்..
How MS kid, can extend her voice, to suit the difficult tempo of the song, even at such a small age!


ஒரு பிறந்த நாள் பரிசாய், இந்தப் பாடலை முன்பு எப்பவோ வலையேற்றி இருந்தேன்..
பாட்டின் வரிகள், காணொளியில் கூடவே வரும்:)

மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ?
மதிமுக முழுதும் தண்துளி தரவே
வார்வேர் சோராதோ?
(மரகதப் பச்சை உமை அன்னை.. அவ வெயிலால் வாடுறாளே..
அவ மதிமுகம் முழுசும் வியர்வைத் துளியில் சோர்ந்து போகுதே)

கரமலர் அணைதந்(து) இன்புறு மடவார்
காணாதே போமோ?
கனமணி குலவும் குண்டலம் அரைஞாண்
ஓடே போனால் வார்
(மலர்க் கரத்தால் அணைத்து மகிழும் பெண்கள், குழந்தையைக் காணாது போகலாமா?
கனமான மணிகள் குலாவும் குண்டலம், அரை ஞாண் கயிறோடே நீ ஓடலாமா?)

பொருமிய முலையும் தந்திட உடனே
தாய்மார் தேடாரோ?
புரவலர் எவரும் கண்(டு) அடி தொழுவார்
போதாய் போதா நீள்
(முலை துடிக்குதே பாலூட்ட; அடேய், ஒன்னை ஒங்கம்மா தேடுறாளே!
தமிழைக் காக்கும் புரவலர்கள், உன் அடியைத் தொழுத் தேடுவார்களே!
* போதாய் = வருக | (நீராடப் போதுவீர், போதுமினோ?)
* போதா = போதம் (எ) ஞானம் மிக்கவனே)

சரவண மருவும் தண்டமிழ் முருகா
தாலே தாலேலோ
சதுமறை பரவும் செந்திலை உடையாய்
தாலே தாலேலோ
(சரவணத்தில் வளரும் தண்டமிழ் முருகா - தாலே தாலேலோ!
நான்மறை போற்றும் செந்தில் (எ) திருச்செந்தூர்க்காரா - தாலே தாலேலோ!)


திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
தாலப் பருவம்
வரிகள்: பகழிக் கூத்தர்

MS "அம்மா" என்று உலகமே பின்னாளில் அழைத்தது..
அந்த "அம்மா" பாடிய தாலாட்டு = இது குழந்தை பாடிய தாலாட்டு!:)

இதுவே MS சுப்புலட்சுமி அவர்களின் முதலில் பதிவு செய்த பாடல் - On LP Records by Oriental Recording Company!
முருகன் துவக்கி வைத்த இசைப் பயணம் = இனிதே "நிறைந்து" முடிந்தது!



செந்திலைக் கொண்ட தண்டமிழ் முருகா 
I Love U தாலேலோ
செவ்வாய் எச்சில் காதலன் முருகா 
I love U தாலேலோ

2 comments:

திண்டுக்கல் தனபாலன் December 03, 2013 11:15 PM  

மிகவும் இனிமையான பாடல்... நன்றி... விளக்கங்கள் அருமை... பாராட்டுக்கள்...

maithriim December 06, 2013 9:42 AM  

எப்படி எங்கேந்து தேடிப் பிடிச்சு தேனினும் இனியப் பாடல்களை தருகிறீர்கள். அதுவும் MS பாடிய முருகன் பாட்டு!

நன்றி.

amas32

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP