Wednesday, February 04, 2015

முத்தமிழ் முருகா!

தைப்பூசத்திற்காக... தாமதத்திற்கு மன்னிச்சுக்கோடா முருகா...

ஷண்முகனின் பாடலை ஷண்முகப்ரியாவில் சுப்புத் தாத்தா அழகாகப் பாடித் தந்ததை நீங்களும் அனுபவியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



முத்தமிழ் முருகா! சக்திவேல் குமரா!
சித்தத்தில் நின்றாடும் செந்தில் வடிவேலவா!
(முத்தமிழ்)

ஓங்காரத் தத்துவத்தின் உட்பொருள் உரைத்தாய்!
சிங்காரத் தமிழினைச் செப்புவித்தாய்!
(முத்தமிழ்)

எந்தை சிவன் ஈன்ற விந்தை மைந்தனே!
தொந்திக் கணபதியின் சோதரனே!
வந்தேன் என முன்னே வந்தருள் புரிபவனே!
சொந்தம் உனையன்றி யார் குகனே!
(முத்தமிழ்)


--கவிநயா

4 comments:

UmayalGayathri February 05, 2015 5:47 AM  

தங்களின் பாடலைக் கண்டேன். நன்று நன்று.
சுப்பு தாத்தா இப்பாடலை பாட கேட்டும் மகிழ்ந்தேன்.

மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் February 05, 2015 8:14 PM  

அருமை அருமை...

தாத்தாவிற்கு வாழ்த்துக்கள் பல...

Kavinaya February 05, 2015 10:10 PM  

வருக, உமையாள் காயத்ரி. மிகவும் நன்றி!

மிக்க நன்றி தனபாலன், தாத்தா சார்பாகவும்...

Nanjil Siva January 02, 2020 9:38 AM  

சுப்பு தாத்தா உண்மையாகவே தீஞ்சுவை குரலுக்கு சொந்தக்காரர் .. வாழ்க அவர் புகழ்! ஜட்ஜ்மென்ட் கிளிக்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP